`ரூ. 1,000 உதவித் தொகைக்கு விண்ணபிப்போர் இந்த தேதிக்குள் பதிவுசெய்யவும்!’- உயர்கல்வித்துறை
அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் மாணவியரின் விவரங்களை வரும் 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 30-ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டியிருக்கும்.
தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேரவையில் அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். `மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்ற இந்த திட்டத்தில், இக்கல்வியாண்டு முதல் தொடங்குவதற்கான பணிகளை உயர்கல்வித்துறை தொடங்கியுள்ளது.
தொடர்ப...