கல்வி-சிறுதொழில் நிதி ஒதுக்கித்தர தேனீ.ஜெயக்குமார் வலியுறுத்தல்
புதுச்சேரி:டெல்லியில் முகாமிட்டுள்ள அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மத்திய சமூக நீதி மந்திரி வீரேந்திரகுமாரை சந்தித்து பேசினார். அப்போது, புதுவை பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக மனு அளித்தார். டெல்லியில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டுக் கழகம், புதுவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கழகத்திற்கு கல்விக்கடன், காலக் கடன், சிறுதொழில் கடன் வழங்குவதற்கு நடப்பு நிதியாண்டுக்கு ரூ. 1 கோடி ஒதுக்கி தந்துள்ளது. இந்த தொகை போதுமானதாக இல்லை. இதனை ரூ. 5 கோடியாக உயர்த்தி கொடுத்தால் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக அளவில் கல்விக் கடன், சிறு தொழில் கடன் வழங்க முடியும் என கோரிக்கை வைத்தார். அமைச்சரின் தனிச் செயலாளர் மனோகரன் உடனிருந்தார். புதுவை மாநிலத்திற்கு ரூ. 5 கோடி ஒதுக்க பரிசீலனை செய்வதாக, மத்திய மந்திரி உறுதியளித்தார்.
நன்றி!! மேலும் படிக்க ...