மருமகனுக்கு 379 உணவு வகைகளைப் பரிமாறிய மாமனார்! எதற்காக தெரியுமா?
திருமணத்துக்குப் பின்னான முதல் சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திராவில் புதுமாப்பிள்ளை ஒருவருக்கு 379 உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர்களுக்குக் கொண்டாட்டம்தான். இது, உழவுத்தொழிலை மதிக்கும் தினம் என்பதால் தமிழ்நாடு மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு எப்படி தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போது புதிதாய்த் திருமணமான தம்பதியர்கள் ‘தலை தீபாவளி / பொங்கல்’ கொண்டாடி மகிழ்வரோ அப்படி அங்கும் கொண்டாடுவர். பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளின்போது தம்பதியருக்கு பல்வேறு வகையான உணவுகளில் விருந்து வைத்து, நகைகளும் பரிசளிக்கப்படும். இந்த உணவு விருந்து கலாசாரத்தில் மணமக்களை ஆச்சர்யப்படுத்துவதில் பிற மாநிலங்களைவிட, ஆந்திர மக்கள் தான் அட்டகாசமாக வேலை செய்வர் என்றால் மிகையாகாது.
நம்ம ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை போல, ஆந்திராவில் உழவை கொண்...